கேரளா சட்டசபை தேர்தல்: இடதுசாரி கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது
திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி கூட்டணியில், தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
தமிழகத்தைப் போலவே கேரளா சட்சபைக்கு மே மாதம் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இம்மாநிலத்தை தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவால் விடும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி, தொகுதிகளை இறுதி செய்து நேற்று அறிவித்துள்ளது.

மொத்தமுள்ள 140 தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 92 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 27 தொகுதிகளும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேசியவாத காங்கிரஸ் 4, கேரள காங்கிரஸ் ஜனநாயகம் 4, இந்திய தேசிய லீக் -3,, பிற கட்சிகளுக்கு 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இத்தகவலை கூட்டணி அமைப்பாளர், வைக்கம் விசுவன் தெரிவித்தார். இக்கூட்டணி, அடுத்த கட்டமாக வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications