இந்த ‘அல்வா’ சோபா உட்கார்றதுக்கா... இல்லை கடிச்சு சாப்பிடுறதுக்கா?
திருவனந்தபுரம்: கேரளாவில் பர்னிச்சர் கடை ஒன்றின் திறப்பு விழாவில் விளம்பரத்திற்காக வைக்கப் பட்ட ‘அல்வா சோபா' பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கேரளாவில் புதிய பர்னிச்சர் கடை ஒன்றின் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. அப்போது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அல்வா வால் செய்யப்பட்ட சோபா ஒன்று, அங்கு பார்வைக்காக வைக்கப் பட்டது.

பச்சை, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம் என வெவ்வேறு வண்ணத்தில் வெவ்வேறு சுவை கொண்ட ஹல்வா துண்டங்களால் அந்த சோபா செய்யப் பட்டிருந்தது.
மேலும், அந்த ஹல்வாவில் சூரியகாந்தி விதைகள், பாதாம், முந்திரி உள்ளிட்ட பல்வேறு பருப்புகளும், கேரட், பூசணிக்காய் உள்ளிட்ட காய் வகைகளும் சேர்க்கப் பட்டிருப்பதாக அதைத் தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹல்வாவால் செய்யப்பட்ட இந்த சோபாவைப் பார்ப்பதற்காகவே தினமும் அக்கடைக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications