ராகிங் கொடுமை.. கிட்னி பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதி.. 9 மாணவர்கள் தலைமறைவு
ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் சிறுநீரக கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் ராகிங் கொடுமையால் கல்லூரி மாணவர் ஒருவர் கிட்னி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயம் அரசு பாலிடெக்னிக் கல்லூரில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் மாணவர் ஓ.எஸ். அவினாஷ் (22). இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் அதே கல்லூரில் 3-ம் ஆண்டு படிக்கும் சீனியர் மாணவர்கள் 9 பேர் ஒரு குழுவாக அவினாஷை கடந்த 2ம் தேதி ராகிங் செய்துள்ளனர். 6 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர் அவினாஷ் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ஓஎஸ் அவினாஸ் கூறுகையில், சீனியர் மாணவர்கள் எங்களது ஆடையை களைய கூறினர். தொடர்ந்து கடுமையான பயிற்சி செய்ய வைத்தனர். தரையில் நீச்சல் அடிக்க கூறி வற்புறுத்தினர். இது சுமார் 6 மணி நேரம் நீடித்தது. இதனால் நாங்கள் சோர்ந்து போய் கீழே விழுந்துவிட்டோம். இருப்பினும், அந்த அறையை பூட்டி வைத்திருந்த மாணவர்கள், எங்களை சத்தத்துடன் பாடுமாறு வலியுறுத்தினர். மது குடிக்க கட்டாயப்படுத்தியதாக அவர் கூறினார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அவினாஸ் திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கடுமையான பயிற்சி காரணமாக, உடலில் உருவான ரசாயனம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு முறை டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது என்றார். பாதிக்கப்பட்ட மற்றொரு மாணவர் எர்ணாகுளம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து 9 மாணவர்கள் மீது கொலை முயற்சி, ராகிங் மற்றும் எஸ்சி எஸ்டி சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications