கேரளாவில் ஃபேஸ்புக்கில் அசிங்கமாக மெசேஜ் போட்ட பக்கத்துவீட்டுக்காரர்: தூக்கில் தொங்கிய இளம்பெண்
கொச்சி: ஃபேஸ்புக்கில் தன்னைப் பற்றி ஒருவர் அசிங்கமாக கருத்து தெரிவித்தது குறித்து போலீசில் புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள சேரநல்லூரைச் சேர்ந்தவர் விஜிதா(27). அவரை பற்றி பக்கத்து வீட்டுக்காரரான ரதீஷ் ஃபேஸ்புக்
கில் அசிங்கமாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து விஜிதா கடந்த 2 மாதங்களுக்கு முன்பே போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நாங்கள் ரதீஷையும், விஜிதாவையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து பேசினோம். இதையடுத்து ரதீஷ் ஃபேஸ்புக்கில் தான் விஜிதாவை பற்றி போஸ்ட் செய்தவற்றை டிலீட் செய்துவிட்டார். அப்படி இருக்கையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறக் கூடாது என்று சேரநல்லூர் காவல் நிலைய அதிகாரி வித்யாதர குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜிதா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் பிணமாகத் தொங்கியதை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார்.
முன்னதாக விஜிதா இது குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
ரதீஷ் விஜிதாவுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும் தொல்லை கொடுத்து வந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ரதீஷ் குடும்பத்திற்கும், விஜிதாவின் குடும்பத்திற்கும் இடையே நிலத் தகராறு இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications