மனைவி எட்டி உதைத்ததால் மாடியில் இருந்து விழுந்த கணவன் மருத்துவனையில் சேர்ப்பு!
காசியாபாத்: பூட்டிய வீட்டுக்குள் வைத்து மொத்தியிருந்தால் இப்படி வெளியுலகத்திற்கு தகவல் பரவியிருக்காது, ஆனால் மொட்டை மாடியில் வைத்து கணவனை மனைவி மிதித்ததால் அந்த சம்பவம் நாடு முழுவதும் பரவிவிட்டது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரிலுள்ள விஜய்நகர் பகுதியில் வசிப்பவர் அமித். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு சுமார் 12 மணிக்கு, அமித் தனது வீட்டு மொட்டை மாடியில் நின்றபடி யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார். கணவனை தேடிக் கொண்டு மாடிக்கு வந்த பூஜா, அமித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென பின்னால் இருந்து அமித்தை உதைத்துள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த அமித், கால் தடுமாறி 12 அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்தார்.
இதைப்பார்த்த சிலர் உடனடியாக அரசு மருத்துவமனையில் அமித்தை சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பூஜாவை தொடர்புகொள்ள முயன்றனர், ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதனிடையே மருத்துவமனையிலல் சிகிச்சை பெற்றுவரும் அமித், ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய சில சோதனைகள் எடுக்க வேண்டியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அமித் வாக்குமூலம் அளித்த பிறகுதான் உதைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.