கோஹ்லி தலைகீழா நின்னாலும் அவருடன் சேர விரும்பாத அனுஷ்கா: ஏன் தெரியுமா?
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியுடன் மீண்டும் சேர்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற முடிவில் உள்ளாராம் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பிரிந்துவிட்டனர். அனுஷ்கா சல்மான் கானின் சுல்தான் படத்தில் பிசியாக உள்ளார்.
கோஹ்லி டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்.
கோஹ்லி
கோஹ்லிக்கு அனுஷ்காவுடன் மீண்டும் சேரும் எண்ணம் உள்ளதாம். இதனால் அனுஷ்காவுக்கு அவரது சகோதரர் மூலம் தூதுவிடுவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சகோதரர் கூறியதை கேட்கவில்லையாம் அனுஷ்கா.
ட்விட்டர்
அனுஷ்காவை பிரிந்தாலும் அவரை கிண்டல் செய்பவர்களை கோஹ்லி ட்விட்டரில் விளாசினார். இதை பார்த்த பலரும் அவருக்கு அனுஷ்கா மீது தான் இப்பவும் எவ்வளவு அக்கறை என்று பாராட்டினர்.
அனுஷ்கா
மீண்டும் கோஹ்லியுடன் சேர அனுஷ்காவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். முடிந்தது முடிந்தது தான். இனியும் கோஹ்லியுடன் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை. அவர் ட்வீட் போட்டால் எனக்கு என்ன என்றது போன்று உள்ளாராம் அனுஷ்கா.
அடுத்த கட்டம்
கோஹ்லியுடனான காதல் முறிந்துவிட்டது. இனி அடுத்த கட்டத்திற்கு செல்வது தான் உகந்தது என்று நினைக்கிறாராம் அனுஷ்கா. அதனால் வந்த வழியே திரும்பிச் சென்று கோஹ்லியுடன் கைகோர்க்க அவர் தயாராக இல்லையாம்.