21ம் நாள் முற்றத்தில் புதைக்க வேண்டும்.. 18 நாட்கள் தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகன் கைது
தாயின் சடலத்துடன் 18 நாட்கள் வாழ்ந்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தா: இறந்த தாயின் உடலுடன் 18 நாட்கள் வசித்த மகனை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தா சிஐடி அலுவலகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், 'சால்ட் லேக் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் மைத்ரேய பட்டாச்சார்யா அவரது தாயாரின் உடலை யாருக்கும் தெரியாமல் புதைக்க தனது உதவியைக் கேட்பதாக’ புகார் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மைத்ரேய பட்டாச்சார்யாவைக் கைது செய்தனர். பின்னர் அங்கிருந்த அவரது தாயின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
இது தொடர்பாக 38 வயதான மைத்ரேயாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அதாவது, மைத்ரேயாவும் அவரது அம்மாவும் வசித்து வந்த வீட்டில் தான் அவரது தந்தை கடந்த 2013ம் ஆண்டு தீவிபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் அவர் ஞாபகமாக அந்த வீட்டைப் புதுப்பிக்காமலேயே அவர்கள் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 18 நாட்களுக்கு முன்னர் மைத்ரேயாவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். ஆனால், மூடபழக்கவழக்கங்களில் அதிக நம்பிக்கை கொண்டவரான மைத்ரேயா, தாயின் உடலை 21 நாட்களுக்குப் பிறகே புதைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார்.
இதனால் வீட்டில் இருந்த அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடைத்து விட்டு, தாயின் உடலுடன் அவர் 18 நாட்கள் அதே வீட்டில் இருந்துள்ளார். தன் வீட்டு முற்றத்திலேயே தாயின் உடலைப் புதைக்க வேண்டும் என விரும்பிய அவர், அதற்காக தனது நண்பரின் உதவியை நாடியபோது தான் போலீசில் சிக்கியுள்ளார்.
போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தனது தாயும் இது போன்ற நம்பிக்கைகளில் அதிக ஆர்வமாக இருந்ததாகவும், எனவே அவரது விருப்பப்படியே தான் நடந்து கொள்ள திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications