'சடலங்கள் விற்பனை'- சினிமாவையே தெறிக்கவிடும் 'டான்' கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை மாஜி முதல்வர்?
கொல்கத்தா: நாட்டையே உலுக்கி இருக்கும் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் குறித்து நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் உரிமை கோரப்படாத, அடையாளம் காணப்படாத சடலங்களை- உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல்களுக்கு பெருந்தொகைக்கு விற்பனை செய்து சினிமாவின் கதாபாத்திரங்களை மிஞ்சுகிற ஒரு தாதாவாக சந்தீப் கோஷ் செயல்பட்டதாக பகீர் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.
கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.

பயிற்சி மருத்துவரின் மரணத்துக்கு நீதி கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள், மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே பயிற்சி மருத்துவர் மரணத்துக்கு பல்வேறு பின்னணிகள் இருக்கலாம்.. குறிப்பாக இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ராஜினாமா செய்த ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் ஊழல் முறைகேடுகள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் அக்தர் அலி, முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அக்தர் அலி கூறியதாவது: ஆர்ஜி கர் மருத்துவமனையில் உரிமை கோரப்படாத அடையாளம் தெரியாத சடலங்களை விற்பனை செய்து வந்தார் சந்தீப் கோஷ். அத்துடன் மருத்துவ கழிவுகளை வங்கதேசத்துக்கு கடத்தும் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் சந்தீப் கோஷ். இது தொடர்பான விசாரணைக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். இந்த விசாரணைக் குழுவில் சந்தீப் கோஷ் குற்றவாளி என ஆதாரங்களுடன் நிரூபித்தோம். ஆனாலும் சந்தீப் கோஷ் மீது மேற்கு வங்க அரசு எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை. இந்த அறிக்கையை சமர்ப்பித்த நாளிலேயே நான் ஆர்ஜி கர் மருத்துவமனையில் இருந்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டேன். எந்த ஒரு ஒப்பந்தமாக இருந்தாலும் சந்தீப் கோஷுக்கு 20% கமிஷன் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்பது எழுதப்படாத ஒன்றாக இருந்தது. இவ்வாறு அக்தர் அலி கூறினார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications