கிருஷ்ணா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு.. வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் சந்திரபாபு நாயுடுவின் வீடு
Recommended Video
அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீடு கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மூழ்கும் அபாயத்தில் உள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் மற்றும் நாகர்ஜூனா சாகர் அணைகள் நிரம்பி வழிகிறது.

இதன் காரணமாக கிருஷ்ணா நதி ஆற்றக்கரைகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. விஜயவாடாவில் உள்ள பிரகாசம் பேரேஜ் அணையில் தண்ணீர் அதிக அளவு வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்குள் புகுந்தது. தரைத்தளத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. முன்னதாக வெள்ள எச்சரிக்கை காரணமாக அவரது வீட்டில் இருந்த கார்கள் அனைத்தும் மங்களகிரிக்கு கொண்டு செல்லப்பட்டது. வீட்டின் கீழ்தளத்தில் இருந்த பொருள்கள் எல்லாம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே முன்னாள் முதல்வர சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் வெள்ளம் வரும் முன்பே இரவோடு இரவாக ஹைதரபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏறபட்டால் கரையோரம் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் அதை ஏற்காமல் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து தங்கியிருந்தார் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஆளராமகிருஷ்ணா குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடு குடியிருந்து வரும் இல்லம் வாடகை வீடு என்பது குறிப்பிடத்தக்கது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications