காவிரி மேலாண்மை ஆணையம்.. கர்நாடக பிரதிநிதியை நியமித்த மத்திய அரசு.. குமாரசாமி கோபம்
Recommended Video

பெங்களூர்: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக பிரதிநிதியை மத்திய அரசு நியமித்ததற்கு கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிவரி மேலாண்மை ஆணையத்திற்கு சம்மந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் உறுப்பினர்கள் பெயர்களை பரிந்துரை செய்ய மத்திய அரசு கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் உறுப்பினர் பெயர்களை அறிவித்த பிறகும்கூட, கர்நாடகா அறிவிக்கவில்லை.

மத்திய அரசு கெடு விதித்த பிறகும்கூட அதை கர்நாடக அரசு செய்யவில்லை. சமீபத்தில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கும் முன்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இது காவிரி விவகாரத்தை மேலும் தாமதப்படுத்தும் முயற்சி என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்று மத்திய அரசு காவிரி ஒழுங்கற்று குழுவிற்கு மத்திய அரசு உறுப்பினர்களை அறிவித்தது. 3 மாநிலங்கள் உறுப்பினர்களை அறிவித்த நிலையியல், கர்நாடகம் அறிவிக்காததால் மத்திய அரசு உறுப்பினரை நியமித்தது. இதற்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குமாரசாமி இன்று நிருபர்களிடம் கூறுகையில், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையத்தில் உள்ள சில சிக்கல்களுக்கு தீர்வுகாண வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டிருந்தோம். ஆனால், மத்திய அரசு கர்நாடகாவை புறக்கணித்து நடவடிக்கை எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக போராட்டம் நடத்தும் என்றார் குமாரசாமி.












Click it and Unblock the Notifications