திறமையான நபரையே கட்சி மேலிடம் நியமிக்கும்: சோனியா உடனான சந்திப்பு பற்றி குஷ்பு விளக்கம்
டெல்லி: தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு திறமையான கட்சியை வலுப்படுத்தும் திறன் உள்ள நபரை தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமிக்கும் என அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்த பின்னர் குஷ்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சோனியா காந்தியை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்ததாக கூறிய அவர் யாருக்காகவும் சோனியா காந்தியிடம் பரிந்து பேசவில்லை என்றார்.

செய்தி தொடர்பாளர் என்ற கோணத்தில் இருந்து பார்க்கும் போது இளங்கோவன் தலைவராக இருந்த போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்புடன் இயங்கியது என்று கூறிய குஷ்பு, கடந்த தேர்தலில் கட்சியின் வாக்கு சதவீதமும் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
தான் எப்போதுமே ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆதரவாளர்தான் என்று கூறிய குஷ்பு, ஈவிகேஎஸ் இளங்கோவனை மீண்டும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்க கோரி வலியுறுத்தவில்லை என்றும் கூறினார். தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு திறமையான கட்சியை வலுப்படுத்தும் திறன் உள்ள நபரை தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமிக்கும் என்றார்.
இணையம் துறைமுகத்திற்கு உள்ளூர் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து வருவது பற்றிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர் இது குறித்து காங்கிரஸ் தலைமை உரிய விளக்கம் அளிக்கும் என்றும் குஷ்பு கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications