லக்கிம்பூர்: விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் 4 பேர் மீது கார் ஏற்றி படுகொலை செய்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
மத்திய பாஜக அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஓராண்டுகாலம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் உத்தரகாண்ட், உ.பி. மாநிலங்களிலும் எதிரொலித்தது.

உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு கறுப்பு காட்டியும் விவசாயிகள் அமைதிப் பேரணி நடத்தினர். அப்போது விவசாயிகள் கூட்டத்தில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் துடித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் விவசாயிகளை கொந்தளிக்க வைத்தது. இதையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர்தான் இந்த சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் தொடர்பும் அம்பலமானது. ஆஷிஸ் மிஸ்ராதான் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்ததுடன் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது உறுதியானது. இவ்வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து கடுமை காட்டியதால் வேறுவழியே இல்லாமல் ஆஷிஸ் மிஸ்ராவை உ.பி. போலீசார் கைது செய்தனர்.
இவ்விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. ஆனால் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. தற்போது உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று 58 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications