லட்சத்தீவில் புதிய சட்டங்களைக் கண்டித்து மாபெரும் உண்ணாவிரதம்- வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறினர்!
கரவெட்டி: லட்சத்தீவில் புதிய சட்டங்களைக் கண்டித்து இன்று கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் இணைந்து 12 மணிநேர முழு அடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக புதிய சட்டங்களுக்கு எதிரான பதாகைகளை பிடித்தபடி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அத்துடன் லட்சத் தீவுகளில் இருந்து கேரளா, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் மொத்தமாக வெளியேறி உள்ளனர்.
லட்சத்தீவுகளுக்கான மத்திய அரசின் நிர்வாக அதிகாரியாக பாரதிய ஜனதா கட்சியின் பிரஃபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். அவர் இந்த பொறுப்பை ஏற்ற பின்னர் லட்சத்தீவில் பல்வேறு புதிய சட்டங்கள் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டன.

கடும் நெருக்கடிகள்
லட்சத்தீவு மக்களின் கடலோர குடியிருப்புகளை ஒழுங்குபடுத்துதல், மாட்டிறைச்சிக்கு தடை, மதுபான பார்கள் திறப்பு என புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகள் தாங்கள் இத்தனை நாளாக வாழ்ந்து வரும் வாழ்வியலையே தலைகீழாக மாற்றுகிறது; தங்களது கலாசாரத்தையே மாற்றி அமைக்க முயற்சிக்கின்றனர் என்பது லட்சத்தீவு மக்களின் பொதுவான குற்றச்சாட்டு.

வீடுகள் முன்பாக உண்ணாவிரதம்
லட்சத்தீவில் உள்ள பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இந்த புதிய சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் ஒவ்வொருநாளும் புதிய புதிய சட்டங்கள் நிறைவேற்றப்படுவது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இத்தகைய ஒடுக்குமுறைகளைக் கண்டித்து லட்சத்தீவில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை 12 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பாக லட்சத்தீவுகளை காப்பாற்றுங்கள் என்ற பதாகைகளை ஏந்தியபடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

லட்சத்தீவில் கொந்தளிப்பு
லட்சத்தீவின் பல பகுதிகளில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளுக்கான நிறுவனங்கள் தவிர பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் லட்சத்தீவில் பெரும் கொந்தளிப்பான நிலைமை உள்ளது.

வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
இதனிடையே கரவெட்டியில் இருந்து படகுகள், கப்பல்கள் மூலம் பெரும் எண்ணிக்கையிலான வெளிமாநில தொழிலாளர்கள் லட்சத்தீவுகளைவிட்டு வெளியேறி வருகின்றனர். கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வெளியேறிவிட்டனர். பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான வழிகாட்டுதல்களிலும் புதிய நிர்வாகி பிரஃபுல் கோடா படேல் புதிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த தொழிலாளர்கள் மீண்டும் லட்சத்தீவுகள் திரும்புவார்களா? என்பதும் கேள்விக்குறி என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications