இறந்த தந்தையின் "உத்தரவின் பேரில்" புராரி தற்கொலையை நடத்திய மகன்... திடுக் தகவல்
இறந்த தந்தையின் உத்தரவின் பேரில் புராரி தற்கொலையை மகன் லலித் பாட்டியா நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.
Recommended Video

டெல்லி: இறந்த தந்தையின் உத்தரவின் பேரில் புராரி தற்கொலையை மகன் லலித் பாட்டியா நடத்தியாக கூறப்படுகிறது.
டெல்லியில் புராரி பகுதியில் 11 பேர் கொத்தாக தற்கொலை செய்து கொண்டிருந்தனர். இது கொலையாக இருக்கலாம் என்றிருந்த போலீஸார் தற்போது தற்கொலை என ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்.
வீட்டிலிருந்து கிடைக்கப் பெற்ற அமானுஷ்ய குறிப்புகள் மூலம் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து இந்த தற்கொலைக்கு காரணம் இறைவனை பார்ப்பது என்ற மூடநம்பிக்கைதான் என்று போலீஸார் கருதுகின்றனர்.

தந்தை குரல்
இந்த தற்கொலை சம்பவத்தில் பெரும் பங்கு நாராயணனின் மகன் லலித் பாட்டியாவுக்கு உண்டு. அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தையை போல் நடந்து கொண்டதாக தெரிகிறது. சில நேரங்களில் தந்தையின் குரலிலும் அவர் பேசுவாராம்.

அதீத நம்பிக்கை
தந்தைதான் தற்போது குடும்பத்தை வழி நடத்தி வருகிறார் என்ற எண்ணம் லலித்துக்கு உண்டு. இதனால் நாம் தற்கொலை செய்து கொண்டாலும் தந்தை காப்பாற்றுவார் என்று அதீத நம்பிக்கையும் இவருக்கு இருந்திருக்கிறது.

உண்ண வேண்டும்
இவர் தந்தை போலவே செயல்படுவதால் மற்ற உறுப்பினர்களும் இதையே நம்பியுள்ளனர். இதையடுத்து இறப்பதற்கு முன்பு 20 சப்பாத்திகளை வாங்கியுள்ளனர். அதற்கு தொட்டு கொள்ள எதையும் வாங்கவில்லை. அந்த சப்பாத்திகளை தாய் நாராயண் கைகளால் அனைவரும் உண்ண வேண்டும் என்று குறிப்பில் இருந்துள்ளது.

மாற்றம் இல்லை
இந்த சப்பாத்திகளை டெலிவரி செய்த பையனிடமும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. டெலிவரி செய்யும் போது அந்த குடும்பத்தினரிடம் எந்தவித மாற்றமும் தெரியவில்லை என்று போலீஸாரிடம் கூறியுள்ளார்.

தந்தை காப்பாற்றுவார்
இதையடுத்து தற்கொலை செய்வதற்கு முன்னர் லலித் எழுதிய குறிப்புகள் கிடைத்துள்ளன. அதில் தற்கொலை செய்துகொண்டால் தந்தை காப்பாற்றுவார் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் கடைசி நேரத்தில் உங்கள் கடைசி ஆசையை சொல்லும்போது மேகங்களில் வெடிப்பு ஏற்படும், பூமி நகரும் என அனைவரும் சப்தமாக கத்தினால் நான் வருவேன் , வந்து உங்களை காப்பேன் என்று தந்தை சொல்வதை போல் லலித் எழுதியிருந்தார்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications