ப.சிதம்பரம், சசி தரூர், சல்மான் குர்ஷித் குறித்து பகீர் தகவல்களை வெளியிடுவேன்- லலித்மோடி மிரட்டல்!!
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், ப.சிதம்பரம், சசி தரூர் பற்றிய ரகசிய தகவல்களை தாம் வெளியிடப் போவதாக ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடு செய்ததால் சிக்கியவர் லலித் மோடி. ஆனால் அவர் லண்டனுக்கு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
லண்டனில் இருந்தபடியே இந்திய கிரிக்கெட் வாரிய விவகாரங்களில் தலையிட்டு குடைச்சல் கொடுத்து வருகிறார் லலித் மோடி.
இந்த லலித் மோடிக்கு உதவியதாகவும், லலித் மோடியிடம் ஆதாயம் பெற்றதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும்; பிரதமர் மோடி அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
Only thing I want to point out that mr chidambaram, shashi tharoor, Salman Khursheed and erstwhile PMO. Should watch this press briefing 😄
— Lalit Kumar Modi (@LalitKModi) June 15, 2015
ஆனால் மத்திய அரசும் பாரதிய ஜனதாவும் சுஷ்மா ஸ்வராஜூக்கு ஆதரவாக இருக்கின்றன. இந்த நிலையில் தம் மீதான விமர்சனங்கள் குறித்து ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து லலித் மோடி பதிலளித்து வருகிறார்.
இந்தப் பதிவுகளில், எனது தரப்பு கருத்துகளை செய்தியாளர்களிடம் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பை மத்திய முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், சசி தரூர், முன்னாள் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் பார்க்க வேண்டும்.