காங்கிரஸுக்கு 11, தேசியவாத காங்.குக்கு 1.. இது லாலு தரும் பீகார் 'ஆஃபர்'!
டெல்லி: லோக்சபா தேர்தலில் பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்களை ஒதுக்குவதாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் அறிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும் என்றும் அது கூறியுள்ளது.
இதை லாலுவே இன்று தெரிவித்தார். இதுதான் எங்களால் முடியும். அவர்களது பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றும் லாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் திரட்டுவதுதான் எனது லட்சியம். காங்கிரஸுக்கு எதிராக கருத்து கூற நான் தயாராக இல்லை. அவர்களுக்கு 11 சீட் தருவதாக கூறியுள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம்.
காங்கிரஸ் தலைவர்களுடன் பேசி வருகிறோம். தவறாக எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். இந்தியா எ்ப்போதுமே காங்கிரஸுக்கே துணை நின்றுள்ளது. நாங்களும் அதுபோலவே இருப்போம்.
மதவாத, வகுப்புவாத சக்திகள் நாட்டைக் கூறு போட முயலுகின்றன. மோடியும், ஆர்.எஸ்எஸ் அமைப்பும், நிதீஷ் குமாருக்கு நண்பர்களாக உள்ளனர். இவர்கள் நாட்டை பிரித்து விடுவார்கள் என்றார் லாலு.












Click it and Unblock the Notifications