Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குர்கானில் பரபரப்பு.. துப்பாக்கி முனையில் லாலு பிரசாத் யாதவின் மருமகனின் கார் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி அருகே, ஹரியானா மாநிலம் குர்கான் நகரில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மருமகனின் காரை, துப்பாக்கி முனையில் சிலர் வந்து பறித்துச் சென்றுள்ளனர்.

சிக்கந்தர்புர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

லாலுவின் மருமகன் வினீத் யாதவ். இவரது டிரைவர் ஹரிபிரகாஷ், டொயோட்டோ பார்ச்சூனர் காரில் சிக்கந்தர்புர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று மாலை 4 மணியளவில் காத்திருந்தார்.

Lalu Prasad's son-in-law's SUV looted at gunpoint in Gurgaon

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர், துப்பாக்கி முனையில் ஹரிபிரகாஷை மிரட்டி கீழே இறங்கச் சொல்லியுள்ளனர். பின்னர் அவரது காரை எடுத்துக் கொண்டு அவர்கள் தப்பி விட்டனர்.

இதுகுறித்து உடனடியாக டிரைவர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். டிஎல்எப் பேஸ் 2 போலீஸார் உடனடியாக விசாரணையில் குதித்தனர். தற்போது காரைத் தேடும் பணி முடுக்க விடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+