குர்கானில் பரபரப்பு.. துப்பாக்கி முனையில் லாலு பிரசாத் யாதவின் மருமகனின் கார் கடத்தல்
டெல்லி: டெல்லி அருகே, ஹரியானா மாநிலம் குர்கான் நகரில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மருமகனின் காரை, துப்பாக்கி முனையில் சிலர் வந்து பறித்துச் சென்றுள்ளனர்.
சிக்கந்தர்புர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
லாலுவின் மருமகன் வினீத் யாதவ். இவரது டிரைவர் ஹரிபிரகாஷ், டொயோட்டோ பார்ச்சூனர் காரில் சிக்கந்தர்புர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று மாலை 4 மணியளவில் காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர், துப்பாக்கி முனையில் ஹரிபிரகாஷை மிரட்டி கீழே இறங்கச் சொல்லியுள்ளனர். பின்னர் அவரது காரை எடுத்துக் கொண்டு அவர்கள் தப்பி விட்டனர்.
இதுகுறித்து உடனடியாக டிரைவர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். டிஎல்எப் பேஸ் 2 போலீஸார் உடனடியாக விசாரணையில் குதித்தனர். தற்போது காரைத் தேடும் பணி முடுக்க விடப்பட்டுள்ளது.