லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கிய ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்
பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவை கால்நடைத் தீவன வழக்குடன் தொடர்புடைய டும்கா கருவூல வழக்கில் பிணையில் விடுதைல செய்ய உத்தரவிட்டிருக்கிறது ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்.
லாலு பிரசாத் 3.13 கோடி ரூபாயை அதிகப்படியாக டும்கா கருவூலத்தில் இருந்து பணம் எடுத்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இதை டும்கா கருவூல வழக்கு என கூறுகிறார்கள். அவ்வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு தற்போது பிணை வழங்கப்பட்டு இருக்கிறது.
தற்போது லாலு பிரசாத் சிறையில் இருந்து வெளி வருவதற்கு எந்த தடையும் இல்லை. இந்த கால் நடை தீவன ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மீது பல வழக்குகள் போடப்பட்டிருந்தன. அதில் நான்கு வழக்குகளில், லாலு பிரசாத் குற்றவாளி என நீதிமன்றம் தீர்பளித்தது.
அந்த நான்கு வழக்குகளில், மூன்று வழக்குகளுக்கு முன்பே லாலு பிரசாத் ஜாமீன் பெற்று விட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
தண்டனை காலத்தில் பாதியைக் கழித்துவிட்டார் என்று தான் லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த 19 பிப்ரவரி 2021-ல் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்த போது, பாதி தண்டனைக் காலம் முடிய இன்னும் சுமார் 1 மாதம் 17 நாட்கள் இருக்கிறது எனக் கூறி, நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்தை நிறைவு செய்த பின், ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து, லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.
- லாலுபிரசாத் யாதவ் உடல் நிலையில் சிக்கல்: ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்டார்
- பிகார் தேர்தல்: நிதிஷ் குமாரின் தனித்துவத்துக்கு முடிவு கட்டிய மக்கள் தீர்ப்பு
கடந்த ஜனவரி மாதம், லாலு பிரசாத்தின் நுரையீரல் தொற்று தீவிரமாக இருந்ததால், அவரை டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது வரை அங்கேயே தான் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன் ராஞ்சியில் இருக்கும் ராஜேந்திரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிகல் சயின்ஸ் (ரிம்ஸ்) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த நான்கு தசாப்தங்களில் லாலு பிரசாத் யாதவ் ஒரு தேர்தல் பிரசாரத்தைக் கூட தவறவிட்டதில்லை. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலில், லாலு பிரசாத் சிறையில் இருந்ததால் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியவில்லை.
பிற செய்திகள்:
- அலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா?
- கொரோனா அலை: உத்தரகாண்டில் 200 பேருக்கு மேல் கூடத் தடை, கும்பமேளாவுக்கு விலக்கு
- பிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்?
- கொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன?
- புறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: