அஸ்ஸாம் வன்முறையின் பின்னணி.. நிலத் தகராறு இனமோதலாக வெடித்த கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி: அஸ்ஸாம்- நாகாலாந்து எல்லைப் பகுதிகள் தொடர்ந்தும் பதற்றமாக இருக்கின்றன. ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தும் அளவுக்கு இனமோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

அஸ்ஸாம் மாநிலத்தில் பழங்குடி இனத்தவருக்கும் வங்கதேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் வெடிப்பது உண்டு. தற்போது அண்டை மாநிலமான நாகாலாந்து மக்களுடன் அஸ்ஸாமியர்கள் மோதிக் கொண்டுள்ளனர்.

15 பேரை பலி கொணடிருக்கும் இந்த இனமோதலுக்கு ஒரே ஒரு காரணம் இரண்டு தனிநபர்களுக்கு இடையேயான நிலத்தகராறுதான் என்று பிரதமர் மோடிக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Land dispute: Reason behind violence

உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை சொல்வது என்ன?

  • அஸ்ஸாமைச் சேர்ந்த ஆதிவாசி விவசாயி சல்மன் சாமா என்பவருக்கும் நாகாலாந்தின் நாகா இனக்குழுவைச் சேர்ந்த எகோன் லோதா என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்தது.
  • இந்த விவகாரத்தை 'ஆதிவாசி தேசிய விடுதலை ராணுவம்' என்ற அமைப்பிடம் சல்மன் சாமா கொண்டு சென்றார்.
  • நாகா குழுவைச் சேர்ந்த எகோன் லோதாவோ நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில்- மூய்வா அமைப்பிடம் கொண்டு சென்றார்.
  • மேலும் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில்- கோலே கிடோவி பிரிவும் களத்தில் குதித்தது.
  • ஒரு நிலத்தகராறுக்காக இரண்டு ஆயுதக் குழுக்கள் இறங்கியது போதாதென்று அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய்க்கு எதிரான காங்கிரஸ் தலைவர்களும் பஞ்சாயத்தில் குதித்துவிட்டனர்.
  • இதனாலேயே வன்முறை வெடித்து 15 பேர் பலியாகி உள்ளனர். எரெங்பார் என்ற இடத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர் என்கிறது அந்த அறிக்கை.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+