இலங்கை அதிபர் சிறிசேன திருப்பதியில் சுவாமி தரிசனம்! பலத்த பாதுகாப்பு!!
திருமலை: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
4 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்த மைத்ரிபால சிறிசேன டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மனைவி உட்பட 24 பேர் குழுவுடன் பீகார் மாநிலம் புத்தகயாவுக்கு நேற்று சென்றார் சிறிசேன. அங்கு மகாபோதி ஆலயத்தில் புத்தருக்கு ஞானம் கிடைத்த போதி மரத்தின் கீழ் நின்றவாறு15 நிமிடம் சிறிசேன பிரார்த்தனை செய்தார்.

மகாபோதி ஆலயத்தில் 1 மணி நேரமாக பல்வேறு பிரார்த்தனைகளை மேற்கொண்ட அவர், பின்னர் அருகில் உள்ள இலங்கை மடத்துக்கு சென்றார். அங்கு மகாபோதி கோயில் நிர்வாகம் சார்பாக தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
இதையடுத்து கயா விமான நிலையத்துக்கு சென்ற சிறிசேன அங்கிருந்து சிறப்பு விமானம் மூலமாக திருப்பதி வந்தார். திருப்பதியில் இன்று காலை அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
சிறிசேனவின் வருகையையொட்டி திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதன் பின்னர் அவர் இலங்கை திரும்பினார்.












Click it and Unblock the Notifications