மோடி பதவியேற்புக்கு முன்பு இந்திய தூதரக அதிகாரிகளை சிறை பிடிக்கத் திட்டமிட்ட லஷ்கர்!
டெல்லி: மோடி பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் ஹெராத் நகரில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்திற்குள் புகுந்து அங்குள்ள தூதரக அதிகாரிகளை பிணையக் கைதிகளாகப் பிடித்து மிரட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தத் தகவலை ஆப்கானிஸ்தான் தூதர் ஷெய்தா அப்தலி கூறியுள்ளார்.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டி...

பிணைக் கைதிகளாகப் பிடிக்கத் திட்டம்
ஹெராத் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்குள் நுழைந்து அங்குள்ள இந்திய அதிகாரிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து மோடி பதவியேற்பின்போது பரபரப்பை ஏற்படுத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர்.

இரு நாடுகளுக்கு இடையே பகையை மூட்ட
இதன் மூலம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு தர்மசங்கடத்தையும், மோதலையும் ஏற்படுத்த அவர்கள் நினைத்திருந்தனர்.

மோடி அரசுக்கு நெருக்கடி தர
மேலும் புதிதாக பதவியேற்கும் மோடி அரசுக்கு நெருக்கடியைத் தருவதும் அவர்களின் திட்டமாக இருந்தது என்றார்.

பதவியேற்புக்கு முன்பு நடந்த தாக்குதல்
இந்த சதித் திட்டம் காரணமாகவே ஹெராத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், மோடி பதவியேற்புக்கு முன்பு தாக்குதலுக்குள்ளானது. இதற்கு லஷ்கர் இ தொய்பாவும், அதன் தலைவர் ஹபீஸ் சயீத்துமே காரணம் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் குற்றம் சாட்டியிருந்தார்.

மோடியுடன் ஆலோசித்த கர்ஸாய்
இந்த சதித் திட்டம் குறித்து டெல்லி வந்திருந்தபோது மோடியுடனும் கர்ஸாய் ஆலோசனை நடத்தியதாக வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்தார்.

இந்தியப் படையினர் முறியடித்தனர்
ஆனால் ஹெராத் தாக்குதலை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோ திபெத் எல்லைப்பாதுகாப்புப் படையினரும், ஆப்கானிஸ்தான் ராணுவமும் இணைந்து முறியடித்து விட்டது நினைவிருக்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications