Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாநில சட்ட அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு.. குஜராத்தில் இன்று தொடக்கம்.. பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு இன்று நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று தொடங்குகிறது.. இன்றைய மாநாட்டில், காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டத்துறை அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்களின் 2 நாள் மாநாடு குஜராத்தில் நடைபெறுகிறது.

இதில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முக்கிய உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் இந்த முன்னெடுப்பு மூலம், இந்திய சட்டமுறை தொடர்பான பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன..

Law ministers conference begins today in Gujarat PM Modi addresses via Video Conference

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில்,மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும், புதிய யோசனைகளை சொல்வதற்கும், இதன் மூலம் மத்திய மாநில அரசுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்த மாநாடு வழிவகுக்கும் என்று பெரிதாக நம்பப்படுகிறது..

இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள மாநாட்டின் தொடக்கத்தில், பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.. மத்திய மாநில அரசுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த மாநாடு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Law ministers conference begins today in Gujarat PM Modi addresses via Video Conference

அதேபோல, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அக்டோபர் நேற்று தொடங்கி உள்ளது..

மாநாட்டின் 2வது நாளான இன்று, மின்சார உற்பத்தி நிறுவனங்களின் நம்பகத்தன்மை, திறன்மிகு கணக்கீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் சேமிப்பும், எரிசக்தித் துறை சீர்திருத்தங்கள், உரிய நேரத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக 24 மணி நேரமும் மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், மின்சார நுகர்வோரின் உரிமைகள், 2030-ஆம் ஆண்டில் எரிசக்தி அமைப்புமுறை, எரிசக்தி பாதுகாப்பு போன்ற விஷயங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+