லீ குவான் யூ மறைவு: இந்தியாவில் மார்ச் 29ல் தேசிய துக்கதினம்
டெல்லி: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வரும் 29ஆம் தேதியை தேசிய துக்க தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 1959 முதல் 1990 வரை 31 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் லீ குவான் யூ. சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று போற்றப்படும் லீ கடந்த 23ஆம் தேதி தனது 91ஆம் வயதில் உயிரிழந்தார்.
லீ குவான் யூ மரணத்தையொட்டி சிங்கப்பூரில் நாடு முழுவதும் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள லீயின் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வரும் 29ஆம் தேதி முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

லீ குவான் யூவின் இறுதிச்சடங்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒருநாள் துக்கம் அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனையொட்டி, வரும் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டை, நாடாளுமன்ற கட்டிடம், உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் உள்ள தேசியக்கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும்.
அரசு தொடர்பான எவ்விதமான கேளிக்கை நிகழ்ச்சிகளும் அன்றைய தினம் நடைபெறாது என மத்திய அரசு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications