பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை: பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1944-களில் இந்தி திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் திலீப் குமார். தற்போது 94 வயதான திலீப்குமார் மும்பை மேற்குபந்த்ரா பகுதியில் மனைவி சாய்ராபானுவுடன் வசித்து வந்தார்.
முதுமை காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.
நடிகர் திலீப் குமாருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேவதாஸ், மொகல் இ ஆசாம், கர்மா போன்ற படங்கள் திலீப் குமார் நடித்த ஹிட் படங்களாகும். முன்னணி நடிகராக திகழ்ந்த திலீப்குமார் சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.
திரையுலகில் சாதனை படைத்தமைக்காக பத்ம விருதுகள், தாதாசாஹிப் பால்கே போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். திலீப்குமார் தன்னைவிட 20 வயது இளையவரான சாய்ரா பானுவை 1966ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.