லஷ்கர்-இ-தெய்பா தீவிரவாதி அபு துஜானா சுட்டுக்கொலை- காஷ்மீரில் பதற்றம் #AbuDujana
லஷ்கர்-இ-தெய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதி அபு துஜானா என்கவுண்டர் செய்யப்பட்டதை அடுத்து காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது.
ஜம்மு-காஷ்மீர்: லஷ்கர்-இ-தெய்பா அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி அபு துஜானாவை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு கொன்றனர். இதனையடுத்து காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது.
அபுதுஜானாவில் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருவதால் அனைத்து மொபைல் இணைய சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் இந்தியாவிற்குள் கலவரம் செய்யவும், நாசவேலைகளில் ஈடுபடவும் தீவிரவாத பயிற்சி அளித்து ஸ்லீப்பர் செல்களாக அனுப்பி வைக்கிறது. இதற்காக கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஆதரவாளர்களை உருவாக்கி வைத்துள்ளது.
காஷ்மீரில் உள்ள லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகளின் மூத்த தளபதி போல செயல்பட்டு வந்தவன் அபு துஜானா. இவன் காஷ்மீரில் புல்லாமா மாவட்டத்தில் உள்ள ஹக்ரிபோரா என்ற இடத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறையிடம் இருந்து தகவல் வந்தது.
இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த ஊரை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது ஒரு வீட்டுக்குள் அபு துஜானாவுடன் 3 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்களை உயிருடன் பிடிக்க பாதுகாப்புப்படையினர் முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால் தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தவே, இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இருவருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் அபு துஜானா உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டாக தகவல் வெளியானது.
கடந்த 2010ஆம் ஆண்டு காஷ்மீருக்குள் ஊடுருவிய அபு துஜானா லஷ்கர் அமைப்பை தீவிரப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டான். அபு துஜானா கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கலவர சம்பவங்களை தூண்டிவிட்டு நடத்தி வந்தான். இதையடுத்து அவனது தலைக்கு போலீசார் ரூ.10 லட்சம் பரிசு அறிவித்திருந்தனர்.
காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது வாலிபர்களை தூண்டி விட்டு கல் வீசச் செய்ததில் இவனுக்கு முக்கிய பங்கு உண்டு. இதுவரை 5 முறைக்கு மேல் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் இருந்து அபு துஜானா தப்பித்துள்ளார். மாறு வேடம் அணிந்து தப்பிச் செல்வதில் கில்லாடியாம் அபு துஜானா.
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் நீண்ட நாட்களாக பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அபு துஜானா சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் இந்த தகவல் வேகமாக பரவியதை அடுத்து காஷ்மீரில் பதற்றம் உருவானது.
அபுதுஜானாவில் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. நிலைமையை கட்டுக்குள் வைக்க மொபைல் இணையசேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications