பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம்... எல்ஐசி எச்சரிக்கை!
எல்ஐசி பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம் என்று அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லி : எல்ஐசி பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம் என்று அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கான ஓடிபி வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படாத நிலையில் பாலிசிதாரர்கள் யாரும் எஸ்எம்எஸ் மூலம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி தங்களது பாலிசிதாரர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் உடன் இணைக்கும் வசதி இன்னும் செயல்பாட்டு வடிவில் தான் இருப்பதால் பாலிசிதாரர்கள் யாரும் குறுந்தகவல்கள் மூலம் ஆதார் எண்ணை இணைக்க முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் எல்ஐசி முத்திரையுடன் பாலிசிதாரர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்களில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாகவே எல்ஐசி இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று எல்ஐசி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் இணையதளத்தில் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது. தவறான தகவல்களைக் கேட்டு ஆதார் எண்ணை பாலிசியுடன் இணைப்பதாக எண்ணி சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் எல்ஐசி கேட்டுக் கொண்டுள்ளது.
Notice - regarding linking of Aadhaar Number through SMS pic.twitter.com/wun1sCKyCV
— LIC India Forever (@LICIndiaForever) November 23, 2017
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி மட்டும் 29 கோடி பாலிசிகளை வழங்கியுள்ளது. தவிர, 21 கோடி வாகன காப்பீடு, மற்றும் கணிசமான எண்ணிக்கையில் மருத்துவ காப்பீடுகள் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களுடன் சேர்த்து மொத்தம் 54 காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
இவை அனைத்துடனும் ஆதார், பான் எண் இணைப்பது வங்கி கணக்குடன் இணைப்பதை விட கடினமானது என்று பாலிசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications