சூரிய நெல்லி பலாத்கார வழக்கு- 18 வருடத்துக்குப் பிறகு முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Subscribe to Oneindia Tamil

Lifer for Suriya nelli rape accused after 18 years
இடுக்கி: கேரள மாநிலம், சூரிய நெல்லி கிராமத்தில் சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் 40 நாட்கள் வரை பாலியல் பலாத்காரம் செய்த வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியான தர்மராஜுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கேரள உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் 1996 ஆம் ஆண்டு கடத்தி கிட்டதட்ட 30க்கும் மேற்பட்டோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட் வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. 40 நாட்கள அவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை துணை தலைவருமான பி.ஜே.குரியனும் சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்த வழக்கில் இருந்து உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.

இதையடுத்து பலாத்கார வழக்கில் குரியனையும் சேர்க்க கோரி பீர்மேடு, தொடுபுழா நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கே.டி. சங்கரன், நீதிபதி. எம்.எல். ஜோசப் உள்ளிட்டோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.

அதன்படி முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தர்மராஜன் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ஏழு பேர் தவிர மற்ற 22 பேருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+