சுனந்தா கொலைக்கும் சீனிவாசனின் பிசிசிஐ தலைவர் பதவி இழப்புக்கும் தொடர்பு: சு.சாமி குண்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவின் கொலைக்கு பின்னால் உள்ள கும்பல் தான் சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை இழக்க காரணம் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தற்கொலை அல்ல அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். சுனந்தா இறந்த 5 வாரத்திலேயே அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தவர் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி. இந்நிலையில் அவர் சுனந்தா மரணம் பற்றி பொதுநல வழக்கு ஒன்றை தொடர உள்ளார்.

இது குறித்து சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சுனந்தாவை கொலை செய்ய ஏற்பாடு செய்த கும்பல் தான் சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரிய தலைவர் பதவியை இழக்க பிரச்சாரம் செய்தவர்களின் பின்னால் இருந்தது. இந்தியாவை தற்போது துபாய் ஆட்டி வைக்கிறது.

10 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய 2 நாடுகள் கருப்பு பணம், ஏர்லைன்ஸ், சினிமா, டெலிகாம் ஆகியவற்றை தன வசப்படுத்திவிட்டன என்று அவர் கூறியுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+