வாழ்க்கையை வெற்றி, தோல்வி நிர்ணயிக்கக் கூடாது... மாணவர்களுக்கு மோடி அறிவுரை
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் தன்டேவாடாவில் மாணவர்களுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நமது வாழ்க்கையை வெற்றி தோல்வி நிர்ணயிக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
நக்சல்கள் ஆதிக்கம் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் பதவியேற்ற பின் முதன் முறையாக பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள தனியார் பள்ளி மாணவர்களிடம் அவர் உரையாடினார். மாணவர்களின் கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

அனுபவமே சிறந்தது
அப்போது அவர், ஒவ்வொருவரும் அனுபவம் பெற்றவர்களிடம் இருந்து அதிகம் கற்று கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். அனுபவமே மனிதனை முழுமையாக்குவதாகவும் அவர் கூறினார்.

உழைப்பால் களைப்பு இல்லை...
மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மோடி, அதிக நேரம் உழைப்பதால் "தான்" களைப்படைவதில்லை என்று தெரிவித்தார்.

நக்சலைட்டுகள் அட்டூழியம்
நக்சல்கள் ஆதிக்கம் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நக்சல்கள் ரயில்வே தண்டவாளத்தை சேதப்படுததியுள்ளனர்.

கிராம மக்கள் சிறை பிடிப்பு
சுக்மா மாவட்டத்தில் பாஸ்ட்டா என்ற பகுதியில் மரிங்கா கிராம மக்கள் சுமார் 300 பேரை நக்சலைட்டுகள் சிறை பிடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications