ஹரித்வார் எக்ஸ்பிரஸ் மீது மற்றொரு ரயில் மோதல் - ஒருவர் பலி- 100க்கும் மேற்பட்டோர் காயம்!
Subscribe to Oneindia Tamil
பல்வால்: ஹரியானாவில் பனிமூட்டத்தால் மும்பையில் இருந்து ஹரித்வார் சென்ற லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயில் மீது புறநகர் ரயில் ஒன்று மோதியதில் ஒருவர் பலியானார். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஹரியானாவின் பல்வால் ரயில் நிலையம் அருகே மும்பையில் இருந்து ஹரித்வார் நோக்கி சென்ற லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்பகுதியில் பனிமூட்டம் மிக அதிகமாக இருந்ததால் சிக்னலை கவனிக்க முடியாமல் புறநகர் ரயில், தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த மும்பை- ஹரித்வார் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது.

இதில் புறநகர் ரயிலின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவ்விபத்தில் மொத்தம் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.












Click it and Unblock the Notifications