கிரிக்கெட் வாரியத்தை கதிகலங்க வைக்கப் போகும் லோதா குழு பரிந்துரைகள்- வெடிக்கும் புது பஞ்சாயத்து!!
டெல்லி: ஸ்பாட் பிக்சிங், பெட்டிங்கில் சிக்கிய ஐபிஎல் போட்டியை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர நீதிபதி லோதா குழு வரும் 4ம் தேதி இரண்டு முக்கிய சீர்திருத்தங்களை அறிவிக்க உள்ளது.
ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் நீதிபதி லோதா குழுவை நியமித்தது. இந்நிலையில் கிரிக்கெட்டை சீரமைக்கும் வகையில் நீதிபதி லோதா குழு வரும் 4ம் தேதி இரண்டு முக்கிய சீர்திருத்தங்களை அறிவிக்க உள்ளது.

மாநிலத்திற்கு ஒரு கிரிக்கெட் சங்கத்தை அமைக்க லோதா குழு பரிந்துரை செய்ய உள்ளது என்று கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்கீழ் உள்ள கிரிக்கெட் சங்கங்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த புதிய பரிந்துரையாம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று கிரிக்கெட் சங்கங்கள் உள்ளன. அதே போன்று குஜராத்திலும் மூன்று சங்கங்கள் உள்ளன. மேலும் ஆந்திராவில் 2 கிரிக்கெட் சங்கங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் மாநில சங்கங்களில் பொறுப்பு வகிக்க தடை விதிக்கவும் லோதா குழு பரிந்துரை செய்ய உள்ளது. லோதா குழுவின் இந்த பரிந்துரைகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவர் செய்த தவறுக்காக அனைவரையும் குறி வைப்பது சரியல்ல என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications