For Quick Alerts
For Daily Alerts
Just In
லோக்சபா தேர்தல்: 66.27% வாக்குகள் பதிவாகி புதிய சாதனை!
டெல்லி: இந்திய தேர்தல் வரலாற்றில் இந்த லோக்சபா தேர்தலில் தான் மிக அதிகளவாக 66.27% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 வது லோக்சபா தேர்தலில் இதுவரை 502 லோக்சபா தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளன. இதில் மொத்தம் 66.27% வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 63.56% வாக்குகள் பதிவானதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் ஆண்களைவிட பெண்களே அதிகளவு வாக்களித்துள்ளனர்.
இந் நிலையில் கடசை கட்டமாக வரும் 12ம் தேதி 41 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது.
Comments
English summary
If there is no dramatic dip in polling figures for the last phase of 41 seats on May 12, the 2014 elections will set a new record in voter turnout with polling figures for 502 seats already crossing the previous high of 63.56% in 1984 and registering a new benchmark of 66.27%.