ஒருபக்கம் அம்பேத்கர் துதி, மறுபக்கம் தலித் விரோத போக்கு.. ஜே.என்.யூ விவாதத்தில் சீறிய காங்.
டெல்லி: தலித் மாணவர் ரோகித் வெமுலா, ஜே.என்.யூ விவகாரங்கள் குறித்து இன்று மதியம் லோக்சபாவில் விவாதம் தொடங்கியது. அம்பேத்கரை துதிபாடும் அரசு தலித்துகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிராத்யா சிந்தியா குற்றம்சாட்டினார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியதுமே, லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ரோகித் வெமுலா மற்றும் ஜே.என்.யூ விவகாரம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இருப்பினும், பிற அலுவல்களை ஒத்தி வைத்துவிட்டு உடனடியாக அதுகுறித்து விவாதிக்க முடியாது என கூறிய சபாநாயகர், இதை ஏற்காத சுமித்ரா மகாஜன், மதியம் 3 மணிக்கு விவாதம் நடைபெறும் என்று அறிவித்தார்.

எனவே மதியம் 3 மணிக்கு விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் எம்.பி ஜோதிராத்யா சிந்தியா பேச்சை தொடங்கினார். அரசை கடுமையாக சாடினார் அவர்.
அம்பேத்கரை துதிபாடும் பாஜக அரசு, மறுபக்கம் தலித்துகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுவருகிறது. ரோகித் தற்கொலை அதற்கு ஒரு உதாரணம். கோஷமிடுவதெல்லாம் தேசத்துரோக குற்றத்தின்கீழ் வராது. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளின் தூண்டுதலில் ஜே.என்.யூ மாணவர்கள் செயல்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜ்நாத் இவ்வாறு கூறும் முன்பாக அதுகுறித்து விசாரணை நடத்தினாரா? ஜே.என்.யூ விரோத போக்கை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. அமைச்சர் நிர்மலா சீதாராமன், சீத்தாராம் யெச்சூரி, வெளியுறவு செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.
பாஜக எம்.பிக்கள் பலர் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும்போது அமைதியாக இருந்த அரசு, மாணவர்கள் மீது மட்டும் தேசத்துரோக வழக்கை பதிவு செய்துள்ளது. பல்கலைக்கழகங்களில் மூக்கை நுழைக்கிறது மத்திய அரசு. இவ்வாறு அவர் பேசினார். அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ் பெயரை அவர் பயன்படுத்தியதை, லோக்சபா சபாநாயகர் கண்டித்தார். அவையில் இல்லாதவர்கள் குறித்து பேசக்கூடாது என்பது மரபு என சபாநாயகர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications