ஆந்திராவில் 3 மாணவர்கள் கொடூரமாக சாவு... லாரியில் 3 கி.மீ.க்கு இழுத்துச் செல்லப்பட்ட பரிதாபம்
விசாகப்பட்டினம்: குடிகார டிரைவர் ஓட்டிச் சென்ற சிமெண்ட் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் விசாப்பட்டினம் அருகே தர்மாவரம் அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் ராயல் நவீன், கார்த்திக், துர்க பிரசாத் சாய். இந்த 3 பேரும் ஆதித்யா எஜூகேஷனல் என்ற கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் தர்மாவரம் ஜங்ஷனில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது சிமெண்ட் லாரி ஒன்று மிகவேகமாக அவர்களது வாகனம் மீது மோதியது. இதில் மாணவன் நவீன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தான். மற்றொரு மாணவனான பிரசாத் அரை கிலோமீட்டர் தூரம் லாரியில் இழுத்துச் செல்லப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட உயிரிழந்தான்.
இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த மாணவன் கார்த்திக் லாரியின் பம்பரில் மாட்டிக்கொண்டான். இதனால் வாகனத்தோடு லாரியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டான். இதில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தான்.
இதனை பார்த்து கூச்சலிட்ட பொதுமக்கள் லாரியை பிடிக்க முயன்றனர். ஆனால் லாரியை நிறுத்த மறுத்து டிரைவர் வேகமாக இயக்கி உள்ளார். தகவல் அறிந்த போலீசார் 3 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று லாரியை சுற்றி வளைத்தனர்.
லாரியில் இருந்து இறங்கி தப்ப முயன்ற டிரைவரின் பெயர் ஷேக் யாகூப் பாசா என்பதும், அவர் விபத்தின் போது மது போதையில் நிதானம் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து யாகூப்பை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications