காதலால் விபரீதம்: கல்லூரி மாணவி, பெற்றோரை கொலை செய்த உறவினர்கள்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் காதல் விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவி, அவரது பெற்றோர் ஆகியோர் உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள கேவல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வகீல் யாதவ்(60). அவரது மனைவி அனிதா தேவி(55). அவர்களின் மகள் புஷ்பா குமாரி(19). அவர் விக்ரம்கஞ்ச் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

புஷ்பா தன்னுடன் படித்த மாணவர் ஒருவரை காதலித்துள்ளார். இதற்கு புஷ்பாவின் உறவினர்கள் பிரதீப் யாதவ் மற்றும் அமித் யாதவ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு பிரதீப் மற்றும் அமித் புஷ்பாவின் வீட்டிற்கு வந்து அவரது காதல் விவகாரம் தொடர்பாக அவரின் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Love issue: College girl, parents killed by relatives

வாக்குவாதம் முற்றவே அவர்கள் துப்பாக்கியை எடுத்து புஷ்பா மற்றும் அவரது தாயை சுட்டுக் கொன்றனர். மேலும் புஷ்பாவின் தந்தையை பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.

படுகாயமடைந்த வகீல் யாதவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சாசராம் சாதர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+