1962க்கு பிறகு முதல்முறையாக, ராணுவத்திற்கு கிள்ளிக்கொடுத்த பட்ஜெட்! தோட்டா வாங்க காசு இருக்குமா?
டெல்லி: மத்திய அரசின் பட்ஜெட்டில் ராணுவத்துறைக்கு ரூ.2.58 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.71 சதவீதம் மட்டுமே என்பதால், 1962ம் ஆண்டுக்கு பிறகு (சீனாவுடனான போர் காலகட்டம்) ராணுவத்திற்கு இந்தியா ஒதுக்கிய மிக குறைந்த தொகையாக இது பார்க்கப்படுகிறது.
ராணுவத்தளவாடங்கள் கொள்முதல் செய்யவும், ராணுவத்தை நவீனப்படுத்தவும் இந்த நிதி போதாது என்கிறார்கள் பாதுகாப்பு வல்லுநர்கள்.
2016-17ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில், கடந்த திங்கள்கிழமை, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் இதுவரை இல்லாத புதுமையாக, ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அறிவிப்பு வெளியாகாதது, மர்மத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராணுவத்திற்கு அரசு ரூ.2.58 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில் இது 1.71 சதவீதம் மட்டுமேயாகும்.
நாடாளுமன்ற நிலைக்குழு, தாக்கல் செய்த பரிந்துரையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாவது ராணுவத்திற்கு ஒதுக்குவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1985ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக, ராணுவத்திற்கு ஒதுக்கிய நிதியுடன், ராணுவத்தினரின் ஓய்வூதிய திட்டமும், சேர்க்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.82,332 கோடியையும் சேர்த்தால், ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி அளவு ரூ.3.4 லட்சம் கோடியாக உயரும். அப்படிப்பார்த்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் மதிப்பு 2.26 சதவீதமாகவே இருக்கும்.
கடந்த பட்ஜெட்டைவிட, இம்முறை, பாதுகாப்புத்துறைக்கு கூடுதலாக, 1.16 சதவீதமே, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் ஓப்பந்தம் செய்யப்பட்ட ஆயுதங்களை கொள்முதல் செய்வதிலேயே இதில், 60 விழுக்காடு நிதி செலவாகிவிடும் நிலை உள்ளதால், புதிய ஆயுத கொள்முதல், ராணுவ நவீனத்துவம் போன்றவற்றுக்கு நிதியை திரட்டுவது எப்படி என்பது பாதுகாப்புத்துறையின் முன்னால் கேள்வியாக கிளம்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications