Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.2.5 கோடி சம்பளத்தில் வேலை! 'லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி' மாணவர் சாதனை! நீங்களும் சேர விருப்பமா?

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாபில் உள்ள 'லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி' எனும் தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற மாணவர் ஒருவர் ஆண்டுக்கு ரூ.2.5 கோடி சம்பளத்தில் வேலையில் சேர்ந்திருக்கிறார். இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை விரைவில் முடிவடைய இருக்கிறது. எனவே உடனே அட்மிஷனுக்கு முயற்சிக்கவும்.

இந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள 'ஃபார்ச்சூன் 500' நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். அவர்களில் பலர் ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமான சம்பளத்தைப் பெறுகின்றனர். கூகுள், மைக்ரோசாஃப்ட், மெர்சிடஸ் பென்ஸ் போன்ற மிகப்பெரிய 500 நிறுவனங்களைதான் 'ஃபார்ச்சூன் 500' என்று குறிப்பிடப்படுகிறது.

University Punjab student

பொதுவாக, இந்தியாவில் பொறியியல் படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு என்று வரும்போது, ஐஐடிகள்தான் ஒரு அளவுகோலாக இருந்து வருகின்றன. இதில் படித்த மாணவர்கள்தான் அதிகபட்ச சம்பளப் பேக்கேஜ்களைப் பெறுவார்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், இந்த வழக்கமான கூற்றை, லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி (LPU)-யின் சமீபத்திய வேலைவாய்ப்பு முடிவுகள் மாற்றி அமைத்திருக்கின்றன.

LPU மாணவர்கள் இப்போது ஐஐடி மாணவர்களுக்கு நிகரான, சில சமயங்களில் அவற்றை மிஞ்சும் அளவிலான வேலை வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். இந்த ஆண்டு பிலேஸ்மென்ட்டில், LPU-வின் இறுதி ஆண்டு பி.டெக் மாணவரான ஸ்ரீ விஷ்ணு, ஒரு முன்னணி ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனத்தில் தேர்வாகியுள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 2.5 கோடி சம்பளத்தை அவர் பெற இருக்கிறார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LPU-வின் வேலைவாய்ப்பு வேகம் இத்துடன் நிற்கவில்லை. இதே ECE துறையைச் சேர்ந்த மற்றொரு இறுதி ஆண்டு மாணவரான பெட்டிரெட்டி நாகா வம்சி ரெட்டி, ஒரு முன்னணி AI ரோபோடிக்ஸ் நிறுவனத்திற்கு தேர்வாகியுள்ளார். இவருடைய சம்பளம் ஆண்டுக்கு ரூ.1.3 கோடி. இதேபோல 1,700-க்கும் மேற்பட்ட LPU மாணவர்கள், ₹10 லட்சம் முதல் ₹2.5 கோடி வரையிலான சம்பளப் பேக்கேஜ்களுடன், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து (MNCs) வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

சிறப்பான பொறியியல் அறிவு திறன் கொண்ட, திறமையாளர்களை தேடும் நிறுவனங்களுக்கு, இந்த தனியார் பல்கலைக்கழகம் ஒரு சிறந்த இடமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு இதுவே உதாரணம். இந்த நிறுவனம் இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்களாக கருதப்படும் ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது என்று LPU-வின் கேரியர் சர்வீஸ் பிரிவின் நிர்வாகி கூறியுள்ளார்.

LPU-வின் வேலைவாய்ப்புத் தேர்வுகள் மிகவும் பிரம்மாண்டமானவை. இங்கு நடக்கும் சாதனைகள் ஒன்றிரண்டு மாணவர்களின் தனிப்பட்ட வெற்றிகள் அல்ல. பல்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மொத்தம் 7,204 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களில் சிறந்த 25% பேரின் சராசரி சம்பளப் பேக்கேஜ் ₹10.23 லட்சம் ஆக இருக்கிறது. Palo Alto Networks, Microsoft, Amazon, மற்றும் ServiceNow போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வந்திருக்கிறது.

ஒரு சிறப்பான சாதனையாக, பி.டெக். (ECE) மாணவரான அடிரெட்டி வாசு, ஏழு வேலை வாய்ப்புகளைப் பெற்று ஒரு நிறுவன சாதனையைப் படைத்துள்ளார். சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, கிளவுட் இன்ஜினியரிங் மற்றும் தயாரிப்பு மேம்பாடு போன்ற உயர்மட்டத் துறைகளில் மாணவர்கள் வேலைகளைப் பெற்றுள்ளனர். இந்தத் துறைகள் சிறப்பான தொழில்நுட்ப மற்றும் பகுப்பாய்வுத் திறனைக் கோருகின்றன. மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்கியுள்ளன.

இதில் மைக்ரோசாப்ட் ₹52.20 லட்சம் என்ற அதிகபட்ச பேக்கேஜையும், அமேசான் ₹46.94 லட்சம் பேக்கேஜையும் வழங்கியுள்ளது. இது பல்கலைக்கழகத்தில் வளர்க்கப்படும் திறமையின் தரத்தைக் காட்டுகிறது. LPU-வின் தொழில்துறை கூட்டாண்மை வெறும் சில பெரிய பெயர்களுடன் நின்றுவிடவில்லை. இது அனைத்துத் துறைகளிலும் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான ஆழமான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. Capgemini, Mindtree, Cognizant, Accenture, மற்றும் TCS போன்ற உயர்மட்ட பணியமர்த்தும் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான பதவிகளை வழங்கியுள்ளன.

இதில், Capgemini 700+ மாணவர்களையும், Mindtree 420+ மாணவர்களையும், Cognizant 400+ மாணவர்களையும், Accenture மற்றும் TCS ஆகிய இரண்டும் 250+ மாணவர்களையும் பணியமர்த்தியுள்ளன. இந்த வெற்றிக்குக் காரணம், திறமைக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறைதான். இது EduRevolution கட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் இரண்டாம் ஆண்டு முதலே நிஜ உலக அனுபவம், தொழில்துறை சான்றிதழ்கள் மற்றும் பிரத்யேக வேலைவாய்ப்புப் பயிற்சி ஆகியவற்றைப் பெறுகின்றனர்.

"நாங்கள் மாணவர்களை வேலைக்கு மட்டும் தயார் செய்யவில்லை - அவர்கள் தலைமை தாங்கவும், புதுமைகளை உருவாக்கவும், மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தவும் தயார் செய்கிறோம்," என்று பல்கலைக்கழக நிறுவனரும் மற்றும் ராஜ்யசபா எம்.பியுமான டாக்டர் அசோக் குமார் மிட்டல் கூறினார். பல்கலைக்கழகத்தில் 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் விரைவில் நிறைவடைய உள்ளன.

நீங்கள் உங்கள் உலகளாவிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கவும், இந்தியாவின் மிகவும் ஆற்றல்மிக்க, தொழில்துறை சார்ந்த பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக இருக்கவும் விரும்புகிறீர்கள் எனில், உங்களுக்கான தெர்வு LPU தான். இடங்கள் குறைவாக உள்ளன, காலக்கெடு விரைவில் முடிவடைய இருக்கிறது. மேலும் தகவலுக்கு இந்த இணைப்பைப் பார்வையிடவும்: http://bit.ly/3HYmjVC

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+