மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: சுறுசுறுப்பாக வாக்களித்த மக்கள்.. அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. 73.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 230 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 114 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. 109 இடங்களில் பாஜக வென்று எதிர்க்கட்சியானது. இந்த நிலையில் முதல்வராக கமல்நாத் பதவியேற்றார்.

அவர் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே முதல்வராக இருந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 22 பேர் ஆட்சிக்கு எதிராக திரும்பினார்கள். இவர்கள் கட்சியில் இருந்தும் விலகினார்கள். அது போல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
இதையடுத்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை பலத்தை இழந்தது. இதையடுத்து மத்திய பிரதேசத்தின் முதல்வராக பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் 4ஆவது முறையாக பதவியேற்றார். ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவில் இணைந்து தற்போது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார்.
இந்த நிலையில் இந்த ஆண்டுடன் மத்திய பிரதேசத்தில் சட்டசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதையொட்டி இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. 230 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி 6 மணி வரை நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 73.86 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி இந்த மாநிலத்தில் 230 தொகுதிகளிலும் 5.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களில் 2.88 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 2.72 கோடி பேர் பெண் வாக்காளர்கள். 22.36 லட்சம் இளைஞர்கள் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கவுள்ளார்கள். வாக்காளர்கள் கட்டாயம் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். பாஸ்போர்ட், ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் ஆகிய ஆவணங்களையும் கொண்டு செல்லலாம்.
இவையும் இல்லாவிட்டால் வாக்காளர் ரசீதை காட்டி வாக்களிக்கலாம். இந்த தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுமா இல்லை காங்கிரஸ் கட்சி வெல்லுமா என்பதை டிசம்பர் 3 ஆம் தேதி தெரிந்து கொள்ளலாம்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications