மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு "இடி" பூரிக்கும் காங்கிரஸ்.. ஏபிபி சி வோட்டர் பரபர கருத்துக்கணிப்பு
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் என்றும் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் வரும் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது .முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். மத்திய பிரதேசத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றது. எனினும், பாஜக செய்த ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு தாவினார். அதன் தொடர்ச்சியாக பாஜக அங்கு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 128 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய பிரதேசத்தில் இந்த முறை காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 118 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. பாஜக, 99 முதல் 111 தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications