டஃப் ஃபைட்! மத்திய பிரதேசத்தில் வெற்றிக்கோட்டை எட்டும் காங்கிரஸ்! டைம்ஸ் நவ் ETG எக்சிட்போல் ரிசல்ட்
போபால்: மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படும் 5 மாநில சட்டமன்ற தேர்தலின் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் மத்திய பிரதேசத்தில் அதிக இடங்களைப் பிடித்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்கிறது டைம்ஸ் நவ் - ETG எக்ஸிட் போல் முடிவுகள்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என நம்புகிறது. கடந்த 2018 தேர்தலில், காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்றது. ஆனால் 2020 இல் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான ஒரு கிளர்ச்சி, பா.ஜ.க.,வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் முழுவேகத்தில் தேர்தல் பணியாற்றியது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மத்தியப் பிரதேசத்தில் கடும் போட்டி நிலவுவதாக கணித்துள்ளன. டைம்ஸ் நவ் - ETG எக்சிட் போல் கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் கட்சி 110-124 இடங்களைக் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாஜக 106-116 இடங்களைக் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் - ETG எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பின்படி, பந்தேல்கண்ட் பகுதியில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, ஜான் கி பாத் எக்சிட் போலில், பா.ஜ.க 100-123 இடங்களையும், காங்கிரஸ் 102-125 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறியுள்ளது. TV9 Bharatvarsh-Polstrat பா.ஜ.கவுக்கு 106-116 இடங்களும், காங்கிரஸுக்கு 111-121 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது. ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ் பா.ஜ.கவுக்கு 118-130 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 97-107 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications