Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மார்க் ஷீட் தர மாட்டியா?" தலைமை ஆசிரியையை பெட்ரோல் ஊற்றி எரித்த "எக்ஸ்" மாணவன்.. பரபர சம்பவம்

தலைமை ஆசிரியை விமுக்தா சர்மாவிடம் மாணவன் அசுதோஷ் பல முறை கேட்டும், அவர் மதிப்பெண் பட்டியல் வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

போபால்: மார்க் ஷீட் வழங்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் கல்லூரி மாணவன், தலைமை ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த தலைமை ஆசிரியை, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவனை போலீஸார் மீட்டு அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கல்லூரி மாணவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 ஒரு தேர்வில் அரியர்

ஒரு தேர்வில் அரியர்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிஎம் ஃபார்மசி கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் தலைமை ஆசிரியையாக விமுக்தா சர்மா (50) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, இந்தக் கல்லூரியில் படித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறியவர் மாணவர் அசுதோஷ் ஸ்ரீவத்சவா (23). இவர் ஒரு செயல்முறை தேர்வில் (Practical Exam) அரியர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

மார்க் ஷீட் கேட்டு..

மார்க் ஷீட் கேட்டு..

இதனால் அசுதோஷ் சர்மாவுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் அவருக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், அவர் வேலை தேடிச் சென்ற சில நிறுவனங்கள், பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை.. மதிப்பெண் பட்டியலையாவது (மார்க் ஷீட்) கொண்டு வாருங்கள் எனத் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, கல்லூரியில் உள்ள தனது மதிப்பெண் பட்டியலை கேட்டு கடந்த ஓராண்டாக அலைந்து வந்துள்ளார் அசுதோஷ் சர்மா.

இழுத்தடித்ததால் ஆத்திரம்

இழுத்தடித்ததால் ஆத்திரம்

ஆனால், அவரது வகுப்பு ஆசிரியர்களோ தலைமை ஆசிரியர் ஒப்புதல் அளித்தால்தான் மதிப்பெண் பட்டியலை தர முடியும் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து, தலைமை ஆசிரியை விமுக்தா சர்மாவிடம் மாணவன் அசுதோஷ் பல முறை கேட்டும், அவர் மதிப்பெண் பட்டியல் வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அசுதோஷ் சர்மாவுக்கு கிடைத்த வேலைகளும் பறிபோயின. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அசுதோஷ், தலைமை ஆசிரியையை பழிவாங்க முடிவு செய்தார். இதன்பேரில், நேற்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவன் அசுதோஷ், தலைமை ஆசிரியையிடம் மார்க் ஷீட் கேட்டுள்ளார்.

பெட்ரோல் ஊற்றி

பெட்ரோல் ஊற்றி

அப்போது வழக்கம் போல அவர் அலட்சியமாக பதிலளித்ததாக தெரிகிறது. இதையடுத்து, தன்னிடம் இருந்த பெட்ரோலை தலைமை ஆசிரியை விமுக்தா சர்மா மீது ஊற்றி மாணவன் அசுதோஷ் தீ வைத்தார். விமுக்தா சர்மாவின் அலறல் சத்தத்தை கேட்ட மற்ற பேராசிரியர்களும், மாணவர்களும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் 80 சதவீதம் தீக்காயம் பட்டிருப்பதால் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அங்கிருந்து தப்பிச் சென்று அருவி ஒன்றில் விழுந்து தற்கொலை செய்ய முயன்ற அசுதோஷை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+