அதென்ன திமிங்கலம்-ம.பி.யில் தேர்தல் வந்தாலே அரசு கட்டிடங்களில் பயங்கரமா தீ பிடிக்குதே..என்னவாம்?
போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் மாநில அரசின் முக்கிய அலுவலகங்கள் இயங்கும் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12,000 முக்கியமான அரசு ஆவணங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் காலத்தில் தவறாமல் தலைமை செயலகத்தில் தீ விபத்து நிகழ்வதும் சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான இதுவரையிலான 6 கருத்து கணிப்புகளும் பாஜக ஆட்சியை பறிகொடுக்கும் என்றே தெரிவித்துள்ளன. அத்துடன் மட்டுமல்லாமல் பாஜக 50க்கும் குறைவான இடங்களைத்தான் பெற முடியும் என இந்த கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

மத்திய பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு தேர்தலில் பெற்றதை விட கூடுதல் இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ம.பி.யில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்.
இந்நிலையில் ம.பி. மாநில முக்கிய அலுவலகங்கள் இயங்கும் கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தலைமை செயலகத்தின் 3,4,5 -வது மாடிகளில் இந்த தீ விபத்து நிகழ்ந்தது. இத்தீவிபத்தில் 12,000 அரசு ஆவணங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. ரூ25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகிவிட்டன.
அதேநேரத்தில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறக் கூடிய சூழ்நிலைகளில் திடீர் திடீரென முக்கிய அலுவலகங்கள் இயங்கும் கட்டிடத்தில் மட்டும் பெரும் தீ விபத்து நிகழ்வது தொடர்ந்து கொண்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2012, 2018-ம் ஆண்டுகளிலும் இதே போல தலைமை செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 2018-ல் சட்டசபை தேர்தலுக்கு சற்று முன்னதாக இதேபோல தீ விபத்து நடந்தது. அதனால் தற்போதைய தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications