ஓடும் கார் மீது நின்று ஸ்டண்ட்.. போலீஸ் வெளியிட்ட வைரல் வீடியோ.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே!
போபால்: படங்களில் வருவது போல ஓடும் கார் மீது நின்று ஸ்டண்ட் செய்த மத்திய பிரதேச போலீஸ் அதிகாரி ஒருவர் தற்போது சிக்கலில் மாட்டி இருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நாடு முழுக்க போலீசார் செய்யும் செயல்கள் பல வைரலாகி வருகிறது. டிரோன் பறக்கவிட்டு குற்றவாளிகளை, லாக்டவுனை அத்துமீறும் நபர்களை பிடிப்பது தொடங்கி சாலையில் சுற்றுபவர்களுக்கு சங்கு ஊதுவது வரை பல விஷயங்களை போலீசார் செய்கிறார்கள்.

இந்த வீடியோக்கள் எல்லாம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இதேபோல் ஒரு வீடியோவை உருவாக்கிய போலீஸ் ஒருவர் பிரச்சனைக்கு ஆளாகி உள்ளார். படங்களில் வருவது போல ஓடும் கார் மீது நின்று ஸ்டண்ட் செய்த அந்த மத்திய பிரதேச போலீஸ் அதிகாரி தற்போது சிக்கலில் மாட்டி இருக்கிறார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த டாமோ பகுதி துணை ஆய்வாளர் மனோஜ் யாதவ்தான் இந்த சர்ச்சைக்கு சொந்தக்காரர். அஜய் தேவ்கான் நடித்த இந்தி படமான சிங்கம் படத்தில் வரும் பாடல் ஒன்றுக்கு இவர் வீடியோ வெளியிட்டு இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். மிக மெதுவாக செல்லும் இரண்டு கார்கள் மீது இவர் கால்களை வைத்து சாகசம் செய்துள்ளார்.
தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் விவேக் எப்படி இரண்டு பைக் மீது இரண்டு கால்களை வைத்து பயணம் செய்வாரே அதேபோல் இவர் பயணம் செய்துள்ளார். இந்த வீடியோ இணையம் முழுக்க பெரிய வைரலானது. பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்ய தொடங்கினார்கள்.
जांच के बाद मामले में पुलिस अधीक्षक दमोह हेमंत चौहान ने की कार्रवाई, चौकी प्रभारी को किया लाइन अटैच, 5000 रुपये का जुर्माना भी लगाया ... सुबह से हुआ था मनोज यादव का वीडियो वायरल @ndtvindia pic.twitter.com/4ppaeKuT87
— Anurag Dwary (@Anurag_Dwary) May 11, 2020
ஆனால் இதை சாகர் பகுதி கமிஷனர் அணில் சர்மா மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டார். டமோ பகுதி போலீஸ் தலைவரிடம் உடனே துணை ஆய்வாளர் மனோஜ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதனால் உடனே தற்போது துணை ஆய்வாளர் மனோஜ் யாதவ் அவரின் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
அதோடு அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சாலை விதிகளை மீறியதற்காக 5000 ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. அவரின் இந்த வீடியோ இப்போதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications