ம.பி. தேர்தலில் அரச பரம்பரை வேட்பாளர்கள் 12 பேர் போட்டி!
போபால்: மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 12 அரச பரம்பரை வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் வரும் 25ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 12 அரச பரம்பரையினர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 8 பேர் பாஜகவையும், 4 பேர் காங்கிரûஸயும் சேர்ந்தவர்கள்.

ரகோகர் தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கின் மகன் ஜெய்வர்தன் சிங் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக ராஜேஷ் தகாட் போட்டியிடுகிறார். தற்போதைய குவாலியர் எம்.பி.யான யசோதரா ராஜே சிந்தியா சிவபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
ராஜ்கர் மாவட்டம் கில்ச்பூர் தொகுதியில் போட்டியிடும் திக்விஜய் சிங்கின் உறவினரான பிரியவிரத சிங்கிற்கு எதிராக பாஜக சார்பில் ஹசாரிலால் டாங்கி களத்தில் உள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த சகோதரர்களான குன்வர் விஜய் ஷா மற்றும் சஞ்சய் ஷா முறையே ஹர்சுத் மற்றும் திமார்னி தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதில் விஜய் ஷா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான சூரஜ் பன் சிங் சோலங்கியையும், அவரது சகோதரரான சஞ்சய் ஷா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் குமாரையும் எதிர்கொள்கின்றனர்.
காங்கிரஸ் முன்னாள் பிரமுகரான மன்வேந்திர சிங், மஹாராஜ்பூர் தொகுதியில் தற்போது பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
மேலும் அரச பரம்பரையைச் சேர்ந்த மாயா சிங், திவ்ய ராஜா சிங், துகோஜி ராவ் பவார், ஹர்ஷ் குமார் சிங் ஆகியோர் பாஜக சார்பிலும், விக்ரம் சிங் நாடிராஜா, மஹேந்திர சிங் கலுகேடா ஆகியோர் காங்கிரஸ் சார்பிலும் மத்தியப் பிரதேச தேர்தல் களத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications