6 வயது குழந்தையை தூக்கி சென்ற சிறுத்தை.. துரத்திச் சென்று கால்களை பிடித்து சுழற்றிய வீரத்தாய்.. வைரல்!
போபால்: பழங்குடியின பெண் ஒருவர் சிறுத்தையிடம் சிக்கிய தனது 6 வயது மகனை தனியாக போராடி பத்திரமாக மீட்டுள்ளார். இந்த செய்தி வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் சித்தி மாவட்டத்தில் உள்ளது சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அருகே இருக்கும் கிராமம். இந்த பூங்கா சுற்று வட்டார பகுதியில் இருக்கும் பாடி ஜிரியா கிராமத்தில் வசித்து வருபவர் கிரண் பாய்கா.
இவர் பாய்கா பழங்குடியினத்தை சேர்ந்தவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் தனது கணவரின் வருகையை எதிர்பார்த்து வீட்டின் வாசலில் தனது 4 குழந்தைகளுடன் காத்திருந்தார்.

நடமாட்டம்
அப்போது அங்கு சிறுத்தையின் நடமாட்டம் இருந்துள்ளது. இதை கிரண் கவனிக்கவில்லை. கைக் குழந்தையை மடியில் வைத்திருந்தார். 6 வயது ராகுல் மற்றும் மற்ற இரு குழந்தைகளும் கிரணுடன் தந்தைக்காக காத்திருந்தனர். அப்போது தூரத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை மெதுவாக வந்தது.

ராகுல் மீது பாய்ந்தது
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் 6 வயது குழந்தை ராகுல் மீது பாய்ந்தது. அந்த குழந்தையை கவ்விக் கொண்டு ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த கிரண், தன்னிடம் இருந்த கைக் குழந்தையை இன்னொரு குழந்தையிடம் கொடுத்துவிட்டு சிறுத்தையிடம் உள்ள ராகுலை மீட்க ஓடினார்.

புதர்
இருட்டு சூழ தொடங்கிய நிலையில் புதருக்குள் இருந்த சிறுத்தையை கிரண் பார்த்துவிட்டார். அதன் கால்கள் ராகுல் மீது இருந்தன. இந்தக் காட்சியை கண்ட கிரண் சிறுத்தை மீது பாய்ந்துள்ளார். பின்னர் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி குழந்தையை சிறுத்தையிடம் இருந்து மீட்டுள்ளார்.

சிறுத்தை
ராகுலை தூக்கிக் கொண்டு ஓடிய போது சிறுத்தையும் துரத்தியது. அப்போது அவரை சிறுத்தை தாக்கியது. உடனே சிறுத்தையின் கால்களை பிடித்து இழுத்து தள்ளியுள்ளார். அதற்குள் இவரது குரல் கேட்டு கிராமத்தினர் கூடினர். உடனே சிறுத்தை ஓடி சென்று மறைந்துவிட்டது. இதையடுத்து மயக்கத்தில் இருந்த கிரணையும் ராகுலையும் கிராம மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஒரு குழந்தையை தாயை காட்டிலும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் நபர்கள் யாருமில்லை என்பதற்கு இதுதான் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications