மகாராஷ்டிராவில் போர்க்கொடி.. நீரவ் மோடி குறைந்த விலையில் வாங்கிய நிலங்களை கைப்பற்றிய விவசாயிகள்
நீரவ் மோடி விவசாயிகளிடம் குறைந்த விலையில் வாங்கிய நிலங்களை மீண்டும் விவசாயிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.
டெல்லி: நீரவ் மோடி விவசாயிகளிடம் குறைந்த விலையில் வாங்கிய நிலங்களை மீண்டும் விவசாயிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
இந்த வழக்கில் பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். சிபிஐ சில முதற்கட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து இருக்கிறது. இவர் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பெரிய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். பிரபலங்கள் எல்லோரும் இவர் நிறுவனத்தில்தான் வாடிக்கையாளராக இருக்கிறார்கள்.

குறைந்த விலை
நீரவ் மோடி கடந்த 2013ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹமது நகர் விவசாயிகளிடம் இருந்து 250 ஏக்கர் நிலம் வாங்கினார். ஒரு ஏக்கரின் அப்போதைய மதிப்பு 2 லட்சம் ஆகும். ஆனால் நீரவ் மோடி 10-12 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது.

மீட்டனர்
இந்த நிலையில் தற்போது அந்த நிலத்தை மீண்டும் விவசாயிகள் மீட்டு இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் என பல விவசாயிகள் வந்து 250 ஏக்கர் நிலத்தையும் கைப்பற்றினார்கள். அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் தற்போது உழுது கொண்டு இருக்கிறார்கள்.

தேசிய கொடி
இந்த விவசாயிகள் எல்லோரும் தேசிய கொடியோடு அந்த பகுதிக்கு வந்துள்ளார்கள். மேலும் நீரவ் மோடி ஒழிக என்றும் கோஷமிட்டுள்ளார்கள். இனி இங்குதான் விவசாயம் செய்ய போகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

சிபிஐ வசம் இருக்கிறது
ஆனால் இந்த நிலம் உட்பட எல்லா சொத்தும் தற்போது சிபிஐ வசம் இருக்கிறது. இதை விவசாயிகள் முறைப்படி கைப்பற்ற முடியாது. அதேபோல் ஏற்கனவே இவர்கள் விற்றுவிட்டதாக கையெழுத்திட்டுள்ளதால் கண்டிப்பாக விவசாயிகள் அந்த நிலத்தை உரிமை கொண்டாட முடியாது என்றுள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications