விலையை கேட்டு நாம் பதறினா.. தமிழகம், மகா. உட்பட 10 மாநிலங்களில் 35,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல்
மும்பை: தமிழகம், மகாராஷ்டிரா உட்பட 10 மாநிலங்களில் மொத்தம் 35,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகராஷ்டிராவில் மட்டும் 23,340 டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பருப்புகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருன்றன.
அண்மையில் ஆந்திரா உட்பட 5 மாநிலங்களில் பதுக்கல் பேர்வழிகளிடம் இருந்து 5,800 டன் பருப்பை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. மேலும் கர்நாடகா, தமிழகத்தில் பதுக்கல்காரர்களின் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 276 இடங்களில் நுகர்வோர் வுிவகாரங்கள் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பதுக்கல்காரர்களிடமிருந்து சுமார் 23,340 டன் துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 35,000 டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 29 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு இந்த பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மும்பையில் 1 கிலோ துவரம் பருப்பு விலை ரூ.3 குறைந்து ரூ.175 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மும்பை, தானே, பான்வல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பெரிய குடோன்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையின் பயனாக, சந்தையில் பருப்பு விநியோகம் சீராகி, விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications