ஹலோ போலீஸ் ஸ்டேசனா... பொண்டாட்டியை கொன்னுட்டேன் ப்ளீஸ் என்னை கைது பண்ணுங்க
தானே: குடும்ப சண்டைகள் எல்லாமே இப்போது கொலையில் முடிகின்றன. தங்கை மகனின் திருமணத்திற்கு போக விடாமல் தடுத்த மனைவியை கொன்று விட்டு போலீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்த இளைஞர் தன்னை கைது செய்து அழைத்து போகுமாறு கூறியுள்ளார். தானே மாவட்டம் அம்பர்நாத் நகரில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ரூபாலி பாய். 39 வயதான அந்த பெண்ணின் கணவர் பெயர் தீபக் சுக்லால் பாய் என்பதாகும். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும் 2 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். திருமணமான நாளில் இருந்து மாறி மாறி சின்னச் சின்ன விசயத்திற்கெல்லாம் சண்டை போடுவார்கள். பாம்பும் கீரியுமாக இவர்களின் வாழ்க்கை கடந்து போனது.

புதன்கிழமையன்று தீபக் சுக்லாலின் தங்கை மகனுக்கு நடைபெறும் திருமணத்திற்கு அழைப்பு வந்தது. தாய்மாமன் என்ற முறையில் போய் பங்கேற்க ஆசைப்பட்டார் தீபக். ஆனால் அதற்கு ரூபாலி சம்மதிக்கவில்லை. வழக்கம் போல வார்த்தைப் போர் வெடித்தது. வாய் சண்டை கை சண்டையாக மாறியது.
பொறுத்து பொறுத்து பார்த்து கடைசியில் பொறுக்க முடியாத தீபக், தனது மனைவியை அவள் அணிந்திருந்த துப்பட்டாவினால் கழுத்தை இறுக்கினான். வெட்டப்பட்ட செடி போல துடி துடித்து கீழே விழுந்து இறந்து போனாள் ரூபாலி. பக்கத்து அறையில் 2 வயது மகன் படுத்திருக்க, மகளோ பள்ளிக்கு போன நிலையில் இந்த சண்டை நடந்து கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.
சிவாஜி நகர் போலீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்த தீபக், தான் தனது மனைவியை கொலை செய்து விட்டதாகவும் தன்னால் தூங்கிக் கொண்டிருக்கும் மகனை விட்டு விட்டு வர முடியாது என்றும் கூறியுள்ளார். தன்னை வந்து கைது செய்து அழைத்துப்போங்கள் என்றும் கூறவே உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது போலீஸ்
ரூபாலியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸ், போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்திய தண்டனைச்சட்டம் 302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீபக்கை கைது செய்து அழைத்துச் சென்றனர். இரண்டு குழந்தைகளையும் ரூபாலியின் சகோதரர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சாதாரண குடும்ப சண்டை கை சண்டையாக மாறி கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. அந்த பிஞ்சு குழந்தைகளின் நிலைதான் தற்போது பரிதாபகரமான நிலையில் உள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications