ஹலோ போலீஸ் ஸ்டேசனா... பொண்டாட்டியை கொன்னுட்டேன் ப்ளீஸ் என்னை கைது பண்ணுங்க
தானே: குடும்ப சண்டைகள் எல்லாமே இப்போது கொலையில் முடிகின்றன. தங்கை மகனின் திருமணத்திற்கு போக விடாமல் தடுத்த மனைவியை கொன்று விட்டு போலீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்த இளைஞர் தன்னை கைது செய்து அழைத்து போகுமாறு கூறியுள்ளார். தானே மாவட்டம் அம்பர்நாத் நகரில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ரூபாலி பாய். 39 வயதான அந்த பெண்ணின் கணவர் பெயர் தீபக் சுக்லால் பாய் என்பதாகும். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும் 2 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். திருமணமான நாளில் இருந்து மாறி மாறி சின்னச் சின்ன விசயத்திற்கெல்லாம் சண்டை போடுவார்கள். பாம்பும் கீரியுமாக இவர்களின் வாழ்க்கை கடந்து போனது.

புதன்கிழமையன்று தீபக் சுக்லாலின் தங்கை மகனுக்கு நடைபெறும் திருமணத்திற்கு அழைப்பு வந்தது. தாய்மாமன் என்ற முறையில் போய் பங்கேற்க ஆசைப்பட்டார் தீபக். ஆனால் அதற்கு ரூபாலி சம்மதிக்கவில்லை. வழக்கம் போல வார்த்தைப் போர் வெடித்தது. வாய் சண்டை கை சண்டையாக மாறியது.
பொறுத்து பொறுத்து பார்த்து கடைசியில் பொறுக்க முடியாத தீபக், தனது மனைவியை அவள் அணிந்திருந்த துப்பட்டாவினால் கழுத்தை இறுக்கினான். வெட்டப்பட்ட செடி போல துடி துடித்து கீழே விழுந்து இறந்து போனாள் ரூபாலி. பக்கத்து அறையில் 2 வயது மகன் படுத்திருக்க, மகளோ பள்ளிக்கு போன நிலையில் இந்த சண்டை நடந்து கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.
சிவாஜி நகர் போலீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்த தீபக், தான் தனது மனைவியை கொலை செய்து விட்டதாகவும் தன்னால் தூங்கிக் கொண்டிருக்கும் மகனை விட்டு விட்டு வர முடியாது என்றும் கூறியுள்ளார். தன்னை வந்து கைது செய்து அழைத்துப்போங்கள் என்றும் கூறவே உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது போலீஸ்
ரூபாலியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸ், போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்திய தண்டனைச்சட்டம் 302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீபக்கை கைது செய்து அழைத்துச் சென்றனர். இரண்டு குழந்தைகளையும் ரூபாலியின் சகோதரர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சாதாரண குடும்ப சண்டை கை சண்டையாக மாறி கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. அந்த பிஞ்சு குழந்தைகளின் நிலைதான் தற்போது பரிதாபகரமான நிலையில் உள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications