குடிக்கப் பணம் தராததால் ஆத்திரம்... தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகன் கைது

Subscribe to Oneindia Tamil

மும்பை: மராட்டிய மாநிலத்தில் மது அருந்த பணம் தராத தந்தையை இரும்புக் கையால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியை சேர்ந்தவர் காசிநாத் கசாரே(70). இவரது மகன் தினேஷ் கசாரே(38), அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 'வார்டு பாய்' ஆக பணி புரிந்து வருகிறார்.

மதுப் பழக்கத்திற்கு அடிமையான தினேஷ், தன் வருமானம் முழுவதையும் அதற்கே செலவழித்து உள்ளார். சமயங்களில் குடிக்க பணம் கேட்டு தன் தந்தைக்கும் தொல்லை கொடுத்து வந்துள்ளார் தினேஷ். அத்தகைய சமயங்களில் காசிநாத்தும் தன்னுடைய பென்ஷன் பணத்தில் இருந்து தினேஷ் மது அருந்த பணம் கொடுத்து வந்துள்ளார்.

இதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவும் தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் தினேஷ். ஆனால், தன்னிடம் பணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார் காசிநாத். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், வீட்டில் கிடந்த இரும்புக் கம்பியால் காசிநாத்தின் தலையில் வெறித்தனமாக தாக்கியுள்ளார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த காசிநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்கு முன்னதாகவே தினேஷ் தலைமறைவானார்.

இக்கொலைத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், தலைமறைவாக இருந்த தினேஷை நேற்று கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+