'ரா' உளவாளி மாத்தையா- கிட்டு கப்பலை காட்டிக் கொடுத்தார்... நீனா கோபால் புத்தகத்தில் அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் துணைத் தலைவராக இருந்த மாத்தையா, இந்தியாவின் 'ரா' அமைப்பின் உளவாளியாக செயல்பட்டார் என்று இந்திய பத்திரிகையாளர் நீனா கோபால் எழுதியுள்ள புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்படுவதற்கு முன்னர் நீனா கோபால்தான் கடைசியாக அவரை பேட்டி எடுத்திருந்தார். தற்போது "The Assassination of Rajiv Gandhi" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை நீனா கோபால் எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் மாத்தையா குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மாத்தையா அசைன்மெண்ட்

மாத்தையா அசைன்மெண்ட்

1989ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா'வின் உளவாளியாக மாத்தையா நியமிக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் பெரும்பான்மையானோர் நம்பிக்கையைப் பெற்று பின்னர் தலைவராக இருந்த பிரபாகரனை அழித்துவிட்டு தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பதுதான் மாத்தையாவுக்கு கொடுக்கப்பட்ட 'அசைன்மெண்ட்'.

கிட்டுவை காட்டி கொடுத்த மாத்தையா

கிட்டுவை காட்டி கொடுத்த மாத்தையா

1993-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு வெளிநாடு ஒன்றில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கப்பல் குறித்த தகவலை 'ரா'வுக்கு கொடுத்ததும் மாத்தையாதான். அந்த கப்பல் சென்னை அருகே சுற்றி வளைக்கப்பட கப்பலை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார் கிட்டு.

மாத்தையாவுக்கு மரண தண்டனை

மாத்தையாவுக்கு மரண தண்டனை

கிட்டுவின் கப்பல் வரும் தகவலை மாத்தையாதான் இந்தியாவுக்கு காட்டி கொடுத்தார் என சந்தேகித்து தமிழீழ விடுதலைப் புலிகளால் அவர் கைது செய்யப்பட்டார். 19 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் 1994-ம் ஆண்டு டிசம்பரில் மாத்தையாவுக்கு மரண தண்டனை விதித்தனர் விடுதலைப் புலிகள். அவரது ஆதரவாளர்கள் 257 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

பிரபாகரனை புரிந்து கொள்ளவில்லை

பிரபாகரனை புரிந்து கொள்ளவில்லை

1987ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை இலங்கையில் இந்திய ராணுவம் முகாமிட்டிருந்த போது, விடுதலைப் புலி்களுக்குள் 'ரா' அமைப்பு ஊடுருவியது. பிரபாகரன் மனதில் என்ன ஓடுகிறது என்ற சமிக்ஞைகளை நாம் சரியாக உணர்ந்திருந்தால் ராஜீவ்காந்தியை நாம் இழந்திருக்கமாட்டோம் என ரா அதிகாரி ஒருவர் கூறினார்.

ராஜீவின் தீர்க்கதரிசனம்

ராஜீவின் தீர்க்கதரிசனம்

ராஜிவ்காந்தி அளித்த கடைசி பேட்டியில், தெற்காசியாவின் எந்த ஒரு தலைவரும் சக்திமிக்கவராக உருவானால் அவர் கொல்லப்படுவது தொடருகிறது. இந்திரா காந்தி, ஷேக் முஜிப், பூட்டோ, ஜியா உல் ஹஹ், எஸ்.ஆர்.டபிள்யூ.டி. பண்டாரநாயக்க என இந்த வரிசை தொடர்கிறது... நானும் சில கருப்பு சக்திகளின் இலக்காக இருக்கிறேன் என்பது எனக்கும் தெரியும் எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு நீனா கோபால் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+